எனக்கு வேறு கனவுகள்....

உனது நதி....
என் தாகம்
தீர்ப்பதற்கில்லை...

என் சந்தைப் பொருள்
உனக்கு விற்பதற்கல்ல.

நானும்...நீயும்
வேறு..வேறு...என்பது
இப்போது..பெயரில் மட்டுமல்ல.
***********************************************.
வானம் சுருங்கிக்
கூடாகிக் கொண்டிருக்கிறது..

என் மேல்...
தாவணி முளைத்த நாளிலிருந்து.
***************************************************
நான்
உன்னைத்தான் எழுதுகிறேன்.

நீ...
என்னைப் படிப்பதாய் நினைக்கிறாய்.

ஒத்துப்போவதில்லை...
நமது வாசிப்புகள்.
********************************************************
நீ
எனக்கு
உயிர் நண்பனாகி விடுகிறாய்...

உணவு விடுதியில்...
நாம் சாப்பிட்டதற்கான பணத்தை
நீ செலுத்திய பிறகு.
**********************************************************
என் கனவுகள்...
சோம்பேறித்தனமானவை...

ஒரு எறும்பு
தூங்குவது போல்
கனவு கண்டு கொண்டிருக்கிறேன் நான்.
***************************************************************

எழுதியவர் : rameshalam (18-Jan-13, 5:23 am)
பார்வை : 116

மேலே