தமிழன் எங்கிருந்தாலும் ஒளிரட்டும்

எழுத்து தளத்தின் வாசகர்களுக்கும்,
எழுத்தாளர்களுக்கும் என் இனிய வணக்கம்
தங்களை எல்லாம் சந்திக்கும் அறிய வாய்ப்பை அளித்த இறைவனுக்கே எல்லா புகழும்
எழுதுகோல் என்பது உலகின் சிறந்த ஆயுதம் என்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை
எழுதுகோல் என்பது உலகின் சிறந்த திறவுகோல் என்று எண்ணுகிறேன்
உங்கள் நண்பர்களை பற்றி சொல்லுங்கள் நான் உங்களை பற்றி சொல்லுகிறேன் போன்றதே
உங்கள் எழுத்துக்களை காண்பியுங்கள்
உங்கள் எண்ணங்களை பற்றி சொல்கிறேன் என்பதும்
ஆகையால் எழுதும் போது மிகவும் கவனமாக எழுதுங்கள் ஆயிரம் ஆயிரம் பார்வையாளர்கள் தங்கள் படைப்பை படிக்க போகிறார்கள் என்பதை உணர்ந்து எழுதுங்கள்
நீங்கள் எழுதும் எழுத்துக்களும்
நீங்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகள் போன்றதே
பார்ப்பவர்கள் ரசித்து ,சிரித்து,பயன்பெற்று போற்றும் படியே எழுதுங்கள்
கவிதையோ,கட்டுரையோ, பாடலோ, நகைச்சுவையோ, உண்மை விபரங்களையோ,தொழில் விபரங்களையோ,மருத்துவ ஆலோசனைகளோ எதுவாக இருந்தாலும் எழுதுங்கள் ஆனால் எழுதுவதற்கு முன் இது பார்வையாளர்கள் ரசிப்பார்கள்,புதிதாய் தெரிந்து கொள்வார்கள், சிரிப்பார்கள்,சிந்திப்பார்கள் ,பயன் பெறுவார்கள் என்ற மேலான கருத்து உங்கள் மனதில் ஆழமாக இருக்கும் பட்சத்தில் சமர்ப்பியுங்கள்
உங்கள் எழுத்துக்களை மணப்பெண் போல் பார்த்து பார்த்து அலங்கரித்து சமர்பியுங்கள்
பரிசுக்காக,போட்டிக்காக,மட்டுமே எழுதுவது என்பது
வரதட்சணை வாங்கவே வளர்க்கும் ஆண்மகன் போன்றது
சற்று சிந்தியுங்கள் ஆயிரம் ஆயிரம் எழுத்தாளர்கள் கூடும் தளம்
லட்ச லட்ச பார்வையாளர்கள் பார்வையிடும் தளம்
முகமறியாமலே முகவரி கொடுக்கும் தளம் இது
நல்ல நட்பு சூழலை உருவாக்கி கொள்ள நல்ல ஒரு வாய்ப்பு இத்தளம்
இங்கு எழுதுவோரும் படிப்போரும் வாழ்கையில்
பட்டை தீட்டிய வைரமாய் மின்ன எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
தமிழன் எங்கிருந்தாலும் ஒளிரட்டும்
உலகின் ஒருமுலையில் இருந்து எழுத்து தளம் மூலம் உங்களை தினம் தினம் ரசிக்கும் உங்கள் ரசிகன்
எழுத்தாளன் சிற்பத்தை செதுக்கும் சிற்பி
அவன் எழுத்துக்கள் உளி
பார்வையாளன் இவர்களால் பயனுறும் அழகிய சிலை
உங்களோடு சேர்ந்ததால்
கொஞ்சமா எழுத தெரியும்
நிறைய படிக்க தெரியும்