குழந்தை கவிதை ...!
![](https://eluthu.com/images/loading.gif)
அறிந்திடு பாப்பா அறிந்திடு ...
யானையிடம் பலமுமுண்டு ...
பலத்துக்கேற்ற பொறுமையுண்டு ...
நீயும் அதை பெற்றுவிடு நீடூடி வாழ்ந்துவிடு ....
அறிந்திடு பாப்பா அறிந்திடு ...
குரங்கிடம் கொள்கையுண்டு ..
கொள்கைக்கேற்ற உறுதியுண்டு ..
நீயும் அதை பெற்றுவிடு நீடூடி வாழ்ந்துவிடு ....
அறிந்திடு பாப்பா அறிந்திடு ..
நரியிடம் புத்தியுண்டு ..
புத்திக்கேற்ற தந்திரமுண்டு ..
நீயும் அதை பெற்றுவிடு நீடூடி வாழ்ந்துவிடு ....
அறிந்திடு பாப்பா அறிந்திடு ..
புலியிடம் கூர்மையுண்டு ..
கூர்மைக்கேற்ற வேகமுண்டு ...
நீயும் அதை பெற்றுவிடு நீடூடி வாழ்ந்துவிடு ....
அறிந்திடு பாப்பா அறிந்திடு ..
ஐந்தறிவு ஜீவன்களும் ..
தந்திருக்கும் அறிவைப்பாரு ..
பேதமின்றி வாழ்ந்திடுவோம் ..உலகநீதி காத்திடுவோம் .....
(நன்றி ;என் கற்பனை தாயே)