வாழ்க்கையில் தோல்வி எனக்கில்லை!!!

என் உலகமே நீதானென்று நினைத்திருந்தேன் உன்னை...
பணத்திற்கு ஆசைப்பட்டு நிற்கதியாக்கிவிட்டாய் என்னை...
மானே... மயிலே... என்று கொஞ்சிய இதழ்கள் மதம் கொண்டால் தகுமோ!!!
தூற்றிய வார்த்தைகள் சுட்டெரிக்க பிணமாக வாழ்கின்றேன் பூமியில்...
தனிமரம் என்று தானே தவிக்கவிட்டாய்!!!
புரிந்துகொள் மேலும் என்னை...
இன்று நான் தனிமரம்தான்...
வசந்தமாகும் காலம் வரும்...
நானும் பூக்களாக பூத்துக்குலுங்குவேன்...
பூக்கள் காய்களாகும்...
காய்கள் கனிகளாகும்...
கனிகள் விதைகளாகும்...
விதைகள் விழ செடிகளாகும்...
செடிகள் பல மரங்களாகும்...
மறுவசந்தம் வரும்பொழுது நானும் சோலையாவேன்...
குறுக்குவழி சென்ற உனக்கும் ஒர் காலம் வரும் கோடையென்று...
சுட்டெரிக்கும் வாழ்க்கையில் சிக்கி நாதியற்று நடைப்பிணமாவாய்...
நிழல் வாழ்வைத் தேடி துடிதுடித்து அலைமோதி அல்லாடுவாய்...
அன்று நான் சொல்வேன் பல உயிர்களுக்கு உயிர்கொடுக்கும் சோலை நானென்று!!!

எழுதியவர் : கார்த்திக்... (19-Feb-13, 12:11 am)
பார்வை : 547

மேலே