தமிழனுக்கு சமர்ப்பனம்!!!
செந்தமிழ் மட்டும் தமிழனுக்கு பெருமை அல்லடா தமிழா...
ஆயக்கலையென்ற உயிர் மூச்சும் வேண்டுமடா தமிழா...
மாலைகளும், மதிப்புகளும் கலை தந்த மகுடமடா தமிழா...
தட்சனை தந்து கற்றதை கற்றுத்தர மறந்தாயடா தமிழா...
அறிவோடு ஆற்றல் கூட்டி படைத்துவைத்தாயடா தமிழா...
அதை மெருகூட்டி மிளிரவைத்து மதித்து வந்தாயடா தமிழா...
செந்தமிழ் கொண்டு பனை ஏட்டில் பேணிக் காத்தாயடா தமிழா...
அடுப்பெரிக்கும் ஓலையென்று அதை எரித்தாயடா தமிழா...
மண்ணோடு மண்ணாக மறைந்து போனது போதுமடா தமிழா...
மறுபிறவி எடுத்துவந்து சரித்திரம் படைப்போமடா தமிழா...
தமிழனென்ற சொல்லுக்கு வீரமென்பது அடையாளம்...
வீரவம்ச தமிழனுக்கு எவன் கட்டுவான் கடிவாளம்!!!
தமிழனென்று முழக்கமிட்டு தலை நிமிர்ந்து நில்லடா தமிழா...
தலை நிமிர்ந்து நிற்பதற்கு ஆயக் கலைவெல்லடா தமிழா...
கலையென்ற மொழி கற்று கடல் கடந்து பேசடா தமிழா...
நான் தமிழனென்று மார்தட்டி வெற்றிநடை போடடா தமிழா...
தமிழுக்கும், தமிழனுக்கும் புகழ்தேடி வாழடா தமிழா...
தானாக தலையெடுக்கும் தமிழ்நாட்டை பாரடா தமிழா...