இரத்தம் மட்டும்
சிந்தை தளர்ந்த
சிறு இதயங்களே
சிங்கள இன வெறியால்
சிதறியது பாலா மட்டும்மல்ல
சில ஆயிரம் எண்ணில்
சிறார்கள் மாண்டார்கள்
ஆதாரம் வேண்டுமா ?
ஆண்டவனிடம் கூட இல்லை
அந்த மரணங்கள்
அவனையும் ஊமையாக்கிவிட்டது
அனுதாபமும் ஆறுதலும் -இனி
அவனுக்குத்தான் தேவை
பாலகர்கள் உடல்கள் பார்க்கின்ற
பல திசைகளிலும்
பாவைகளை போல
பகுதி பகுதியாக சிதரியதை
பார்த்த மக்களை கேளுங்கள்
பாவம் அவர்களிடம்மிருந்து
பதில்கள் கண்ணை தழுவிய
இரத்தம் மட்டுமே ...
இரத்தம் மட்டுமே .....