கடுகுக்கதை (8)

வீட்டில் எல்லோரும் சுமாரான வடிவுதான் ..!
அதிலும் இவள் அழகில்லை என்று அவளுக்குள் ஒரு மன உறுத்தல் ..! திருமணமும் ஆகவில்லை என்ற ஏக்கமும் உண்டு ...! வெறுப்பு ஏற்பட்டு வெளியேறி விட்டாள் ...!

விதிவசம் அவளை விலைமாது ஆக்கிவிட்டது ..!
அன்று நடந்த பொலிஸ் சுற்றி வளைப்பில் கைதுசெய்யப்பட்டாள்...!
மாலை செய்தியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட -அழகி -கைது என்றது ..!இப்போ மட்டும் எப்படி ..?
அழகியென் உலகம் ஏற்கிறது ...?
இந்த இடத்தில் நான் வாசித்த ஒரு வரி நினைவுக்கு வருகிறது ....

-எந்தப்பெண்ணும் இரவில் அழகியாகத்தான் இருப்பாள் -

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (25-Feb-13, 7:43 am)
பார்வை : 195

மேலே