ஜில்லுனு ஒரு காதல் (பகுதி-4)

பைக் பின்னால ப்ரியாவோட கைப்பையை தோளில் மாட்டிகொண்டு அவஇடுப்ப பிடிசிகிட்டு
உட்கார்ந்து தினமும் ஊர் முழுக்க பவனி வந்தேன்

டேய் மாப்ள இப்போ என்சுற்று உனக்கு நான் சமைக்க கத்து தரேன் என்றால்,வேணாம்டி அம்மா நம்மள தப்பா நினைப்பாங்க சொன்னகேளு என்றேன்,ஹே நான் ஏற்கனவே அவங்ககிட்ட எல்லாம் பேசிட்டேன் வாட என என் கை பிடித்து சமையல் அறைக்கு அழைத்து சென்றால் இல்லை இல்லை இழுத்து சென்றால்

உப்பு,புளி,மிளகாய்,மஞ்சள்,கடுகு,சீரகம்,மிளகு என எல்லாவற்றையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தால்,இன்னைக்கு நார்த் இந்தியன் பலவ் சொல்லித்தரேன் என சொல்லி அவள் மும்முரமாக ஆரம்பிக்க நான் அவளுக்கு தெரியாமல் செயல் அரை கதவை தாளிட்டு அவளை அழுத்தமாய் கட்டி அணைக்க நார்த் இந்தியன் பலவ் தமிழ் நாட்டு பொங்கலாய் மாறி போனது

அவ என்னிடம் பேசாமல் வாய்மூடி,கண் மூடி,வேற்கிறது இம்மாரியான சமயங்களில் மட்டுமே,அப்பொழுது மெல்ல அவள் காதருகில் சென்று திமிராய் சிரித்த படி ராட்சசி நீ எவ்வளோ படிச்சி இருந்தாலும்,எப்படியா பட்ட புத்திசாலியா இருந்தாலும்,எவ்வளோ திறமையானவள இருந்தாலும் நவீன் மேல நீ எப்பவுமே எனக்கு கிழே தண்டி நீ என குறும்பாய் சொல்ல சீ என தள்ளி விடுவா


சுடு தண்ணி கூட ஒழுங்கா சமைக்க தெரியாத நான் இன்று சைவம் அசைவம் என வெளுத்து வாங்கி சமைக்க கத்துகிட்டேன்

எங்கள் காதலுக்கு கடவுள் எங்களுக்கு பரிசளிக்க விரும்பினான் ஆம் என் ப்ரியா இப்போ முழுகாம இருக்க

அவளுக்கு மூனு மாசம் இருக்கும் போது திருவண்ணமலைக்கு அலுவலக வேலையாக செல்ல வேண்டிய சூழ்நிலை எனக்கு இவளும் தானும் கூட வருவதாக அடம் கொண்டால் வேறு வழியில்லாமல் இவளை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையம் வந்தேன் அங்கு எல்லா பேருந்துகளும் நிரம்பி வழிந்தது,அன்று திருவண்ணாமலை கிரிவல நாள் என்பதால் தான் இவ்வளவு கூட்டம் என்று தெரிந்து கொண்டேன்

வேறு வலி இல்லாமல் நின்ற படி பயணம் செய்வது என முடிவெடுத்தோம்,நிற்க கூட முடியாத நிலை அவ்வளவு கூட்டம் என் ப்ரியாவை என்னை நெருக்கி நிற்கவைத்து கொண்டேன் பேருந்து பாதி வழியை அடைந்த பொழுது

டேய் மாப்ள எனக்கு வாந்தி வருதுடா என கண் கலங்கினால்,என்ன செய்வது இவ வாந்தி எடுத்தானா எல்லார் மீதும் படும் எல்லோரும் எசுவர்களே என சிந்தித்த எனக்கு ஒரு யோசனை தோன்றியது என் நெக் பனியனுக்கு உள்ளே அவள் முகம் நுழைத்து இப்போ எடு பிரியா என்றேன் அவளும் வேறு வழியில்லாம என் பனியன் உள்ளே வாந்தி எடுக்க சுற்றி இருந்த அனைவரும் என்னை மிகவும் பாராட்டினார்கள்,அதே சமயம் என்ன ஆயிட்ட்று என அக்கறையோடு விசாரித்தார்கள் நான் அவள் 3 மாதம் கற்பம் என்றேன் சட்டென இரு நண்பர்கள் எழுந்து எங்களுக்கு உட்கார இடம் அளித்தனர்,சில தாய்மார்கள் என் ப்ரியாவிடம் குடுத்து வச்சவமா நீ என சொல்ல என்னை கருணையாய் பார்த்து கண்ணீர் சிந்தினால் என் ப்ரியா

வழியில் ஒரு ஓட்டலில் வண்டி நிற்க நான் அங்கிருந்த குளியல் அறைக்கு சென்று என்னை சுத்த படுத்தி கொண்டு ஆடையை மாற்றிக்கொண்டு காபி அவளுக்கும் எனக்கும் வாங்கி மிண்டும் பயணப்பட்டு வெற்றி கரமாக பயணத்தை முடித்தோம்

இந்த சின்ன நிகழ்வு என் ப்ரியாவுக்கு என்மீது வார்த்தையில் அளவிட முடியா நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டது

நான் சாதரணமாக முடி வெட்டி கொண்டு,
குளித்து கண்ணாடி முன்னின்றாலும் என்னை பின்னல் இருந்து கட்டி கொண்டு சின்ன பையன அழகா இருக்கட என்பால்

என்னை அவள் மடியில் படுக்க வைத்து கொண்டு என் தலை கோதுவது,காது குடைவது,நகங்களை வெட்டுவது என எப்பொழுதும் என்னை தொட்டபடியாய் இருப்பாள் நானோ பூமியை சொர்க்கமாய் அனுபவித்தேன்

(தொடரும்)

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (28-Feb-13, 2:02 pm)
பார்வை : 144

மேலே