விழித்திடு மனிதா!

குளு குளு ஏசியினில் ஒய்யாரமாய்
உட்கார்ந்தே வேடிக்கை பார்க்காதே
மனிதா
என்றும் வேடிக்கை பார்க்காதே
வெள்ளம் போல் பாய்ந்திடும் காலத்தை
மின்னலாய் தாக்கியே
விதியை வென்றிட வேண்டும்
மனிதா
என்றும் விதியை வென்றிட வேண்டும்
தட்டிட திறந்திடுமே மனக்கதவு
உள் புகுத்திடுவாயோ துணிவினை
விழித்திட வேண்டும் இனிதே
விடியலை நோக்கியே
மனிதா
என்றும் விடியலை நோக்கியே !

எழுதியவர் : புலவர் தேன்மலர் (28-Feb-13, 1:56 pm)
சேர்த்தது : Pulavar Thenmalar
பார்வை : 120

மேலே