[419] வாழ்வு சுகப்படும்...

சுவைபடச்
சொல்ல
வேண்டின்,
சொல்வளம்
பெருக்க
வேண்டும்;

கவைபடல்
விரிவைக்
காட்டும் !
கருத்தினில்
பயனைக்
கூட்டும்!

கவைபடப்
பிரிந்து
வாழ்ந்தும்
கருத்தினில்
மாறு
பட்டும்

சுவைபடச்
சொல்ல
வாரீர்!
சுகப்படும்
வாழ்வு
காணீர்!
+++
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ?
வன்சொல் வழங்கு வது!----(குறள்)

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (28-Feb-13, 2:52 pm)
பார்வை : 121

மேலே