பலி

முதலில் வந்தவன்
வேகமாக இயங்கினான்
இரண்டாவதாக வந்தவன்
இன்னும் வேகமாக இயங்கினான்
அடுத்து வந்தவன்
அத்தனை மூர்க்கமாக..
அடுத்து வந்தவனை
நினைவு படுத்த முடியவில்லை...
அடுத்து ஒருவன்
வந்தானா?
யோசிக்க முடியவில்லை
அடுத்து வந்தவனும்
இயங்கி இருக்கலாம்...

தெரியாமல்
நான் இறந்து கொண்டிருந்தேன்
சிறகொடிந்த
பறவையை
கைவிட்ட
வானம் போல....
ஒரு இருப்பு
இல்லாமைக்குள்
பயணித்துக் கொண்டிருந்தது...

ஆம்,
கண்டிப்பாக நான்
இறந்திருந்தேன்....

எழுதியவர் : கவிஜி (7-Mar-13, 12:31 pm)
பார்வை : 86

மேலே