இதயமும் துள்ளிடும்

நீரைத் தொடும் வானோ
நெஞ்சைக் கிள்ளுகிறது !
நிலத்தின் வண்ணமோ
உள்ளத்தை வருடுது !

சோகத்தை சுமந்திடும்
சுமைமிகு இதயமும்
இதமாகி சுகமாகும்
எழில்மிகு சூழலால் !

இயற்கைக் காட்சியால்
இன்னலுறும் நேரமும்
இன்பமாய் மாறிடும்
இதயமும் துள்ளிடும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (8-Mar-13, 9:51 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 86

மேலே