மரணம் விதைக்கும் பிரம்மன் நாம் !!!!

மரணம் வென்று.....!
ஜனனம் இயங்க......!
விதிகளை அழித்து......!
விதைகள் விதைக்கும் பிரம்மன் நாம்......!
இறைவன் மௌனம் காக்க,,,,
இயற்கை உதவி கொண்டு,,,
உயர்ந்தோம் மருத்துவ துறையில்....!
நாம் இன்றி இவ்வுலகம் இல்லை,,,,
என்று சொல்ல கர்வம் கொள்வோம்.....!
நம் உயிர் அணுக்கள் அதில்,,,,
தொழில்நுட்பம் புகுத்தி,,,,
புது யுத்திகள் கண்டோம்,,,,
நம் சதைகள் தான் கொண்டு.....!
சடங்கு தான் வெறுக்கும்,,,,
இறைவன் நாம்,,,,
பெருமை கொள் மனிதா....!

எழுதியவர் : அரவிந்த்.c (10-Mar-13, 11:30 am)
பார்வை : 127

மேலே