மதிப்போம் முதியோரை

மூப்பின் வயதோ முகத்தில்
முதுமையோ முக வரியில் !

நோக்கும் பார்வை உணர்த்தும்
எண்ணிடும் வாழ்வின் முடிவை !

வருத்தம் வழியுது விழிகளில்
கடந்திட்ட வாழ்வை நினைத்து !

இறுதிவரை இருப்பது கோலும்
ஊன்றி நடந்திட துணையாய் !

கட்டியவனும் சென்று விட்டான்
பிறந்தவனும் விட்டு விட்டான் !

ஊசியாய் குத்துகிறது உள்ளத்தில்
உதிரமும் வடிகிறது கண்களில் !

நம்நிலையும் நாளை இதுதானா
நாளை நடப்பதை யார் அறிவார் ?

என்றும் மதிப்போம் முதியோரை
முடிந்த அளவு உதவிடுவோம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Mar-13, 10:40 pm)
பார்வை : 2879

மேலே