இவர்களும் நாம்தானே

'அம்மா' 'ஐயா' என்றே
தமிழில் அழைக்க இன்னும்
சிலர் இருக்கிறார்கள்!

பேரூந்து இரயில்
கடைவீதி கோயில்
இவர்களுக்கு தொழிற்சாலை!

கை கால் கண்
இல்லையென்றால்
தொழில் அமோகம்!

வயது முதிர்ந்த
கிழவன் கிழத்தி
பசியோடு அழும்
குழந்தையுடன் தாய்
இவையெல்லாம் மேலும் தகுதிகள்!

காரணம்
சோம்பலின் தொழில்
முதலின்றி இலாபம்
இழப்பதற்கு ஒன்றுமில்லை
தொழில் வரியில்லை
மனித இரக்கம்
இவைகள் மட்டுமில்லை..


சமூக சிக்கல்
சோம்பேறிகளுக்கு ஆதரவு
முந்தியடிக்கும் முட்டாள்கள்
பெரியவர்களுக்கு மதிப்பின்மை
தலைவர்களுக்கு பொறுப்பின்மை
பிள்ளைகளை மறுதலிக்கும் பெற்றவன்
பெற்றவர்களை மறுக்கும் பிள்ளைகள்
மக்களின் சுயநலம்!

எழுதியவர் : Alexander (16-Mar-13, 3:34 am)
பார்வை : 135

மேலே