பாட்டி
பாட்டியின் இடுப்பில் பயணித்து
பள்ளிக்கு சென்றநாளில்
கணித ஆசிரியர் இட்ட அடி
என் தொடையில் விழுந்ததோ ?
இல்லையில்லை
என் பாட்டியின்
ஈரக்குலையில் விழுந்ததோ ?
வலியின் சுவடு
மறுநாளே மறைந்துவிட்டது
என் பாட்டியின்
கண்ணீரின் சூடு
இன்றுவரை என் நெஞ்சில் கதகதப்பாய்

