...........நிஜ நிழல்..........

நிழலின் மகத்துவத்தை,
நீ வந்தபிறகுதான் உணர்ந்தேன் !
உன் நிழலில் உலவவிட்டு,
என் உலகை பொலிவாக்கினாய் !
காலக்கணக்கில் நான் மெதுவாய்,
அமைதிக்குள் அனுமதிக்கப்பட்டேன் !
ஆனபோதும்................
இருளெனும் போர்வை போர்த்தி,
ஒரு நள்ளிரவில் போய்விட்டாய் நீ !
பற்றி எரிகிறேன் எனக்குள் பதறியடித்து !
எங்காவது எனக்காக விழி கசிந்தபடியிருப்பாய் !
என்ற நம்பிக்கை நிழலில் ! அதுவான உன் அருகில் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (24-Mar-13, 8:04 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 75

மேலே