உனக்காகவே நான்......

நித்தம் தொடரும் உனது புறக்கணிப்பில்
இறுகிய பாறையாய் எனது இதயம்...
அதில் துளிர்க்கும் பசுந்தளிராய் உன் நினைவுகள்...!

உன்னைத் தீண்டியே கிடந்து தவிக்கும்,
என் இதயத்தில் பூத்துக்குழுங்கும்
அந்தக் காதலின் நறுமணம் உணர்வாயா......

அது வீசிச்செல்லும் சுகந்தத்தில்
திசைமறந்து வீழ்ந்து மடிந்த தேனீக்கள்
அழுகுரல்தான் உனக்கு சொன்னால் புரியுமா...

அங்கு கொஞ்சிப் பேசி தழுவின
கிளிகளின் கனிந்த காதல்கூட கசந்து
தனைமறந்து காலிடை வீழ்ந்ததறிவாயா...

எத்தனை முறை இறக்கி வைத்தாலும்
தவிப்பெனும் சுமையும் இதய ரணங்களும்
வலியுடன் கணக்கத்தான் செய்கின்றன...

இமையை அழுத்தும் பாறாங்கல்லாய்...!
என் வார்த்தைகள் உனக்கு வெளிப்படுத்துவது
உன் மீதான என் காதலை மட்டுமல்ல...
உனக்கான என் வாழ்க்கையின்
வெற்றிடத்தையும் தான்...!

வழி மேல் விழி வைத்து எதிர்பார்த்திருக்கவில்லை
என்றாலும் காத்திருக்கிறேன்
உனக்காக விடை தெரியாமல்...

விருப்பம் கொண்டு விரைந்து வருவாயா..?
இல்லை வெறுப்பை சுமந்து விலகிச் செல்வாயா..?

எழுதியவர் : தீ (24-Mar-13, 9:09 pm)
Tanglish : unakaakave naan
பார்வை : 92

மேலே