அம்மா

கருவறையில் கடவுள் குழந்தையெனபத்துமாதங்களாக
எனைத்தாங்கி நீ பட்ட அரும்பாட்டை அறிவேனம்மா !
உனைப்போல் ஒரு தெய்வம் இப்பூமியில் இல்லையம்மா!
அன்புக்கும் நீதானம்மா கருணைக்கும் நீதானம்மா
அறிவுக்கும் நீதானம்மா பொறுமைக்கும் நீதானம்மா !
நீதான் என் உயிரம்மா நீயின்றி இவ்வுலகேதம்மா!
உந்தன்பெருமையை உரைக்க வார்த்தையின்றி தவிக்கிறேனம்மா !
எனக்காக பசி பட்டினி கிடந்தாயம்மா!
நேயுற்றவேளையில் துடிதுடித்தாயம்மா!
யாரல்முடியுமம்மா உன்னால்தானேயம்மா !
உனக்காக வாழ்ந்ததில்லை எனக்காகவே வாழ்கின்றாயம்
மா !
உன்னை நானடைய என்னதவம் செய்தேனம்மா !
உந்தனுக்கு யான்பட்ட கடன்தீர்க்க இப்பிறவி போதாதம்மா -இன்னும்
ஏழேழு பிறவி வேண்டுமம்மா !