Sugi Viththiya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Sugi Viththiya
இடம்:  ஈழம்
பிறந்த தேதி :  12-Aug-1983
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Mar-2013
பார்த்தவர்கள்:  438
புள்ளி:  149

என்னைப் பற்றி...

நினைவுகள் சுகமானது

நிதர்சனம் கனமானது !!!

என் படைப்புகள்
Sugi Viththiya செய்திகள்
மலர்91 அளித்த படைப்பில் (public) Sudha YuvaRaj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Dec-2013 6:19 pm

நாய் வாலை நிமிர்த்திப் பார்த்தேன்
கையைப் பிடித்துக் கடித்தது
இயற்கைக்கும் செயற்கைக்கும்
உள்ள வேறுபாடு
இப்போது புரிந்தது.

மேலும்

இப்ப எப்படி 17-Dec-2013 5:38 pm
ஆமாம், தோழி, உண்மைதான் சின்னப் பையனாக இருந்தபோது வாலுப்பையனாகத் தான் இருந்தேன். 17-Dec-2013 3:36 pm
உண்மை அருமையாக சொன்னீர் அய்யா ..!!! 17-Dec-2013 3:36 pm
நன்றி சுகி வித்யா அவர்களே 17-Dec-2013 3:34 pm
மலர்91 அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Dec-2013 1:38 pm

மனதெல்லாம்
தூய்மை துருப்பிடித்திருக்க
உருப்படத் தெரிந்தவர்க்கு
ஆனந்த வாழக்கை.
ஆன்மீக ஆடை
பாதுகாப்பு கவசம்
உண்மை வெளிப்படும் வரை

மேலும்

போலி பக்தி என்பதைவிட போலி சாமியார் என்று கூறி இருக்கலாம். ஒன்றிற்கும் பயன்படாமல் துரு ஒருநாள் உளுத்துப் போகும். நல்ல படைப்பு அய்யா. 18-Dec-2013 9:51 pm
உண்மை தான் அருமை தோழமையே! 18-Dec-2013 1:38 pm
இப்படியும் ஒரு வாழ்க்கையா?மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் 18-Dec-2013 12:56 pm
ஆனந்த வாழ்க்கை... ஆனந்த வழுக்கை..! ஆனது ஒருநாள்..! அப்படிதானா தோழமையே..! 18-Dec-2013 12:01 am
குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Dec-2013 3:06 pm

தாய்மை என்றால் எனக்கு அப்படி என்கிறார்கள்...
ஆனால்...
அடுத்தவர் தாயை தலையில் ஓங்கி அடிக்கிறார்கள்..!

நண்பரின் குழந்தையை அடிக்காமல் தடுக்கிறார்கள்...
ஆனால்...
தான் பெற்ற குழந்தையை தாறுமாறாய் அடிக்கிறார்கள்..!

கற்கவைக்கும் கல்விமான்கள் நாங்கள் என்கிறார்கள்..
ஆனால்...
அவர்தம் பிள்ளைகள் வேறு பாடசாலையில் படிக்கிறார்கள்..!

இவருடன் இருக்கும்வரை கவரிமான் என்கிறார்கள்..
ஆனால்...
எதிர்வரிசை சென்றவுடன் பச்சோந்தியில் சேர்கிறார்கள்..!

இவர் கைகாட்டினால் பேருந்து நிற்க சொல்கிறார்கள்..
ஆனால்...
அடுத்த நிறுத்தத்தில் நிறுத்தினால் ஏனோ சீறுகிறார்கள்..!

தனக்கு மட்டுமே நட்பு வேண்டுமென ஓடுகி

மேலும்

சிறப்பானது ! 22-Apr-2014 7:12 pm
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் தோழமையே..! நட்புடன் குமரி. 25-Jan-2014 12:53 am
வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றிகள் தோழமையே..! நட்புடன்குமரி. 25-Jan-2014 12:53 am
யதார்த்தம் தழுவிய கவி. 25-Jan-2014 12:11 am
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Dec-2013 1:53 am

எத்தனை பேர்
ஒன்றாய் இணைந்து
ஊளையிட்டாலும்...

ஒரு மூங்கிலில் இருந்து
புறப்பட்ட ஒரு
புல்லாங்குழல் இசைக்கு
ஈடாகுமா...?

மேலும்

கருத்திற்கு நன்றி நட்பே 27-Nov-2014 10:30 pm
கருத்திருக்கு நன்றி தோழரே 27-Nov-2014 10:30 pm
கருத்திற்கு நன்றி 27-Nov-2014 10:30 pm
அது வேறு இது வேறு! 27-Nov-2014 6:34 pm
Sugi Viththiya - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 7:14 pm

நீ செய்த தவறை
சுட்டிக் காட்டியதால்
என் நட்பு
போலியானது என்றாய்.
உன் தவறைத்
திருத்த முடியாத
போலியான நட்பாக
நான் இருக்க விரும்பவில்லை!!

மேலும்

நன்றி தோழமை 22-Jan-2014 2:00 pm
உண்மையான நட்பை அழகா சொன்னீங்க அருமை தோழி! 03-Jan-2014 11:57 am
அருமை 18-Dec-2013 10:10 am
வாழ்க வளமுடன் 17-Dec-2013 11:09 pm
Sugi Viththiya - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 7:12 pm

என்னுடன்
தொடர நினைத்திருந்தால்
என்னை விட்டுச் செல்ல
வழி தேடி இருக்கமாட்டாய்.
விட்டுச் செல்ல முடிவெடுத்ததால்
காரணமின்றி சென்று விட்டாய் !!

மேலும்

மிக்க நன்றி தோழமையே... 22-Jan-2014 1:55 pm
அருமை தோழி! 03-Jan-2014 11:57 am
மிக்க நன்றி தோழமையே... 04-Dec-2013 6:29 pm
நன்று தோழி... 03-Dec-2013 8:09 pm
Sugi Viththiya - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 7:10 pm

என்னை நீ
பிரிந்தவேளையில் இருந்து
என் கண்கள் சிந்திய கண்ணீரை
மிச்சப்படுத்தி இருந்தால் ...
என் வாழ்நாளுக்கான தண்ணீர்
தேவையைப் பூர்த்தி செய்திருப்பேன் !!

மேலும்

உண்மைதான். மறப்பதற்கும் இல்லை.மறுப்பதற்கும் இல்லை . 17-Dec-2013 2:36 pm
பெரும்பாலான இயந்திரங்களுக்கு நாம் அடிமையாகி நமக்கு நாமே தீமையைத் தேடிக்கொள்கிறோம் என்பதையும் மறந்துவிடாதீர்கள் 11-Dec-2013 9:40 pm
உங்கள் கருத்திற்கு .நன்றி . எத்தனை இயந்திரங்களைக் கண்டு பிடித்தென்ன??? மனித மனங்களை இரும்பால் செய்யவில்லையே .. . 11-Dec-2013 8:32 pm
கடல் நீரையும் நல்ல தண்ணிராக மாற்றும் இயந்திரம் வந்து விட்டது. இங்கு பிரிவின் வேதனை கொட்டித் தீர்க்கிறது 07-Dec-2013 6:42 pm
Sugi Viththiya - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 7:08 pm

அன்பு வைத்தமைக்கு பரிசு
கண்ணீர்த் துளிகள் !!
அன்பு வைத்தமைக்கு பரிசு
நான் துரோகி !!
அன்பு வைத்தமைக்கு பரிசு
எனக்கு அவமானம் !!
எல்லாம் தந்தது
காதலாக இருந்திருந்தால்
ஏற்றிருப்பேன்.
நட்பாகப் போய்விட்டதே
என்ன செய்வேன் ????

மேலும்

நீங்கள் சொல்வது உண்மையே... கருத்துக்கள் துவண்டு கிடந்த நெஞ்சிற்கு உரமாக உள்ளது.நன்றிகள் .... 04-Dec-2013 6:36 pm
நாம் வேதனை பட்டாலும் யார் கவலை படமாட்டர்களோ அவர்களை நினைத்தே நாம் கவலை படுவது முட்டாள் தனம் தானே ??????? சிந்தியுங்கள் . உங்களின் வாழ்க்கையை உங்களுக்காக வாழ பழகுங்கள். உங்களின் வாழ்க்கை சிறக்கும் 04-Dec-2013 6:30 pm
மிக்க நன்றி தோழமையே முயச்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன்..... உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகவும் ஆறுதலை அளிக்கிறது. 04-Dec-2013 6:22 pm
காலம் நல்ல மருந்து , அது எல்லா காயங்களையும் ஆற்றும் . நீங்கள் அதுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் . மறக்க நினைக்கும் நபரின் ஞாபகம் தரும் எந்த பொருளையும் உங்கள் கண் முன் படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள் . நம் மனம் நினைத்தால் எதையும் நம்மால் செய்ய முடியும் தோழி . தொடர்ந்து கவனத்தை வேறு விடயங்களில் கவனம் செலுத்துங்கள் . வானம் கூட வசப்படும் தோழி 04-Dec-2013 6:11 pm
மேலும்...
கருத்துகள்

மேலே