மானுடம் விசித்திரமானது

வரம் தந்து கொண்டே
இருந்தால்..
தெய்வம் தெய்வம்.
வருத்தமும் சோகமும்
வாழ்க்கையில் வந்தால்
தெய்வமா இருக்கிறதா
இல்லையா என்ற
சந்தேகம்
வாழ்க்கை ஓர் அனுபவம்
என்பதே தத்துவம்
யாருக்கு இருக்கிறது
அந்த மனப் பக்குவம் ?
மானுடம் விசித்திரமானது
~~~கல்பனா பாரதி~~~