பார்த்துகொள் என்னை பெற்ற தாய்போல ...

தத்தி தத்தி நடக்கையில் பாதம்
காயம் பட்டுவிட போகுதோ என தோன்றும்
நீ சிரிக்கையில் உன் முகம் பார்த்து
என்னை நான் மறந்தேன் நேற்று
உன் மொழி புரியாதபோதும் தலையாட்டிட மனசுக்குள் தோன்றும்
உன் மழலை அசைவுகள் யாரும் எழுதாத கவிதைகள்
காற்றில் கை வீசும் ஓவியம்
மழலை ஒவ்வொரு மைநிதணும் வரைகின்ற காவியம்
உனது கவலை இல்லா உலகம் அதில் எனக்கும் இடம் வேண்டும்
சேர்த்துகொள் என்னை மழலை நீ என்றாலும்
பார்த்துகொள் என்னை பெற்ற தாய்போல

எழுதியவர் : ருத்ரன் (4-Apr-13, 3:53 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 58

மேலே