நமது ஆண்டன் பெனி

ஒரு கவிதையை
பற்றிய கவிதை
இது!
இவர் எழுதுகோல்
எதைப்பற்றி எழுதினாலும்
கவிதையாகி போகும்!
பிள்ளைகளின் நட்பை
வெல்ல பொம்மைகளோடு
போட்டி போடுவார்!
இவர் மகனுக்கு
தலை வாருவதைக்
கூடத் தவிர்ப்பவர்
அவனுள் இவரை
திணித்து விடாதிருக்க..!
குவளை நீர்
மொத்தமும் சிந்தி
விட்டாலும்,மகள்
கொண்டு வந்ததில்
அவர் தாகத்தை
தீர்த்து கொள்பவர்!
உடுக்கை இழந்தவன்
கையென தனித்துவம்
வாய்ந்த அன்போடு
நட்பை பாராட்டுபவர்!
அன்பிற்கு இவர்
இலக்கணம்,இவருக்கு
கொஞ்சமும் இல்லை
தலைக்கனம்!
தன்னடக்கத்துக்கு இவர்
உதாரணம்,இவருக்கு
கொஞ்சமும் இல்லை
தற்பெருமை!
இவரின் எளிமை,
நமக்கும்,நமது
தளத்திற்கும் வளமை!
உலகுக்கு ஒளி
ஊட்டி வளம்
தரும் சூரியனைப்போல்!
நம் தள
நண்பர்களின் எழுத்துகளுக்கு
கருத்தெழுதி ஊக்கம்
அளித்து வாழ்த்தும்
இவரும் சூரியனே!
இவரின் இயற்பெயர் ரவி(சூரியன்)....,,,!
அவரும் அவரின்
இல்லத்தாரும் எல்லா
வளமும் பெற்று
நோய் நொடி
இல்லாது நீண்டு
வாழ இறைவனை
வேண்டுவோம்!
அன்புடன் நவீன் மென்மையானவன்