காதல் கிறுக்கன்

உதட்டு ஓரத்தில்
உதறலாய் ஒட்டிய சோற்றுப் பருக்கையை
நளினமாய் இழுத்துக் கொண்டாய்
நாவினால்...
இருந்த ஒரு
இதயத்தையும்
இதழ் வழியே
இழுத்துக் கொள்(ல்)கிறாய்...
இதயமே இல்லையாம்
இதில் "பசி இல்லை" என்று சொன்னால்
காதல் கிறுக்கன் என்கின்றது உலகம் ..
ஐயோ பாவம் ...!!!