கொடியதை காட்டிலும் கொடியது!

மிக கொடியது
விஷம்,அதனை
காட்டிலும் கொடியது
மதியை மங்க
செய்யும் மது!

விஷம் உயிரை
மட்டும் பறிக்கும்!

மதுவோ மானம்,
மரியாதை,குணம்,
என எல்லாவற்றையும்
பறித்து பிறகு
உயிரையும் இலவச
இணைப்பாய் எடுத்துக்கொள்ளும்!

போதைக்கு அடிமையானவரை
கண்டு,ஈன்றெடுத்த
தாய்,கட்டிய
மனைவி,பெற்றெடுத்த
பிள்ளைகள் என
எல்லோரும் வெட்கி
வெறுத்து ஒதுககுவர்,
ஒதுங்குவர்!

உயிருக்கு உயிரான
தாய்,மனைவி
பிள்ளைகளே வெறுக்கும்
பொழுது சொந்தபந்தங்களின்
நிலையோ இன்னும்
மோசமாகவே இருக்கும்!

ஊரே இகழ்ந்து
சிரிக்கும்,போதைக்கு
அடிமையானவனிடம்
பேசுவதே இழுக்கு
என நினைக்கும்!

மேதையாய் இருந்தாலும்
போதைக்கு அடிமையென
இருந்தால் தெருநாயை
விட மிககேவலமாக
நிலையை அடைவார்!

அவமானத்திற்கு நிரந்தர
சின்னமாகி போவார்!

போதையை விலை
கொடுத்து வாங்கி
குடித்து மனம்
கெட்டு,மானம்
கெட்டு,உடல்
கெட்டு,ஏனைய
எல்லாம் கெட்டு
நடை பிணமென
வாழ்வதும் வாழ்வா?

சொந்த செலவில்
சூனியம் செய்து
கொள்வதும்,போதை
கொள்வதும் ஒன்றே!

களவு,கொலை,
கற்பழிப்பு,விபச்சாரம்
இவற்றை பயிற்று
கொடுக்கும் அரக்க
ஆசானே மது!

குருவிக்கூடென இருக்கும்
மகிழ்வான குடும்பத்தை
மிக எளிதாய்
சிதைக்கும் சக்தி
மதுவுக்கு உண்டு!

கொடியதை காட்டிலும்
கொடியது குடியது!

சுயமரியாதையை,உயிருக்கும்
மேலாக நினைக்கும்
தமிழன் நாம்மெனில்
ஒரு போதும்
குடிக்கா திருப்போம்!

சிந்தியுங்கள் தோழர்களே,
சூளுரை கொள்வோம்,
போதையை அறவே
நாமும் தவிர்ப்போம்,
நம் நண்பர்களையும்
தவிர்க்க செய்வோம்!

சுயமரியாதையோடு
சுயநினைவில் மகிழ்வான
வாழ்வை மனநிறைவாய்
வாழ்வாங்கு வாழ்வோம்!

-அன்புடன் நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (20-Apr-13, 8:08 pm)
பார்வை : 118

மேலே