நீ வருவாயென !

நீ வருவாயென ! காதல் கவிதை
காற்றைத் தூது விட்டேன் ,
கண்ணே உன் சுவாசமாகிவிட.
கனவைத் தூது விட்டேன்
பெண்ணே உன் தூக்கமாகிவிட !


துக்கத்தைத் தூது விடுகிறேன், உன் பக்கத்தில்
நீ கசக்கிப் போட்ட காகிதமாகவாவது கிடக்க !..

என்னை தொலைத்தவளே!
இன்னும் என்னில் சந்தேகங்கள் நிலைக்க
- நீ வருவாயென ! -
கண்மணியே !
உன் பகலில் என் இரவைத் தேடுகிறேன்
என் பகலில் உன் இரவைத் தொலைத்து விட்டு !

எழுதியவர் : கவி கே அரசன் (22-Apr-13, 8:41 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 113

மேலே