யார் கற்று கொடுத்தது??

குயில்களுக்கு
யார் கற்று கொடுத்தது?
தெரியாத மொழியில்
அழகாக பாட!!!!

மரங்களுக்கு
யார் கற்று கொடுத்தது?
இல்லாத தாளத்தில்
அழகாக ஆட!!!!

மேகங்களுக்கு
யார் கற்று கொடுத்தது
வெள்ளை வண்ணத்தில்
விந்தையாய் வரைய!!!

சூரியனுக்கு
யார் கற்று கொடுத்தது?
கொள்ளை மனங்களை
கொள்ளை அடிக்க!!!!!

மலர்களுக்கு
யார் கற்று கொடுத்தது?
தன்னை சூடிய மங்கையை
மனம் கவரும் நங்கையாக ஆக்க!!!

வானுக்கு
யார் கற்று கொடுத்தது?
மேகத்தோடு சேர்ந்து
கற்பனை செய்ய முடியா அளவிற்கு
அழகை பிரதிபலிக்க..!!!!

ஆஹா!! ஆச்சரியம்!!!
அருமை!!! அற்புதம்!!!

இது போன்ற வார்த்தைகள் போதாது...
கடவுளின் படைப்பை
எடுத்துரைக்க!!!!!

அவன் பெரியவன்!!!!
அவனே பெரியவன்!!!!

எழுதியவர் : ஹசீனா (23-Apr-13, 9:51 am)
பார்வை : 161

மேலே