இறைவன் படைப்பில்...

இறைவன் படைப்பில்... தலைவன் சிறையில்....
பசுமைகள்கவர்ந்திடும் மலையவன் வலையில்....
பார்வைகள் உருக்கிடும் ஆதவன் உலையில்....
முகடுகள் உயர்ந்திடும் வானவன் வரையில்....
முகில்கள் நகர்ந்திடும் வளர்ந்தவன் தலையில்....
கோள்கள் மயங்கிடும் மறைப்பவன் சிரிப்பில்....
அருவிகள் பாய்ந்திடும் வல்லவன் அலையில்....
தாளங்கள் கேட்டிடும் கரத்திடும் ஒலியில்....
மீன்கள் துள்ளிடும் குளித்திடும் சிலிர்ப்பில்....
இலைகள் அசைந்திடும் பார்ப்பவன் நிலையில்....
வண்டுகள் இசைத்திடும் பாடகன் குரலில்....
விலங்குகள் சொக்கிடும்மேய்ப்பவன் இசையில்....
பறவைகள் நடனமிடும் அசைப்பவன் நடையில்....
பூக்கள் மலர்ந்திடும் மன்மதன் அழகில்....
கனிகள் காய்த்திடும் விதைத்தவன் உயிரில்....
கோவில்கள் அமைந்திடும் தேவன் கரையில்....
மனங்கள் வளைந்திடும் நேசிப்பவன் அழகில்....
காடுகள் மலைகள் இறைவன் கலைகள்...

எழுதியவர் : Loka (23-Apr-13, 9:32 am)
சேர்த்தது : loka
பார்வை : 116

மேலே