மட்டைபந்தட்டமும் வாழ்க்கையும்
நம் வாழ்வுக்கும் மட்டை பந்தாடத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு ...ஆம்
மைதானம் நம் வாழ்க்கை!!!
ஆட்டக்காரர்களான நாம் தான் கதாநாயகர்கள்!!!
களத்தில் அனைவரின் பார்வையும் நம்மீதே இருக்கும்....
அவர்கள் ஜெயித்தாலும் கை தட்டுவார்கள் ...
தோற்றாலும் கை தட்டுவார்கள்...
வீசப்படும் ஒவ்வரு பந்தும் நீ தோற்க்கவேண்டும்
என்றே வீசப்படும் ...
மேலும் உன்னை தோற்கடிக்க 10 பேர் கொண்ட
குழு காத்துக்கொண்டே இருக்கும்....
உன் உடன் கை கோர்த்து நிற்கும்
மற்றொருவன் கூட உனக்கு
துணை நிற்பதில்லை எதிரே தான் நிற்பான்....
இதை அனைத்திற்கும் மேலே உன் அணியிலேயே
உன் ஆட்டத்தை ஆட ஒருவன் தயார் நிலையில் இருப்பான்.....