முடிந்த வரை நனைந்திடுங்கள் ........

எனக்குத் தெரிந்து
எந்த உபகரணம் கொண்டும்
தடுக்கவில்லை யாரும்
பெய்யும் மழைக்கும், காய்ந்த தலைகளுக்கும் ,
இடையே உள்ள இடைவெளியை !

பரவி விழுந்திடும் துளிகளில்
பதறி ஓடவில்லை யாரும் -மாறாக
புரவி போல் ஓடி கதறி எல்லோரையும் அழைத்து
சிதறிச் சிதறி நனைகிறார்கள் மழையில்!

ஆடுகிறார்கள்
சிறுவர் பெரியோர் பாகுபாடின்றி
மழையைக் கொண்டாட
அவரவற்கு தெரிந்த அசைவுகளில் !

இன்றைய அதிசயம் டைனோசரைப் போல்
மாறக் கூடும் நாளை
மழையும் !

முடிந்தவரை மூழ்கி
நனைந்திடுங்கள் மழையில்!

யார் கண்டது !

உங்களையும் இப்புவியையும்
நனைவிக்கும் இறுதித் துளிகளாய்க்
கூட இருக்கலாம்

இப்போது
நீங்கள் நனைந்து கொண்டிருக்கும் மழை!

எழுதியவர் : ராஜேஷ் PA (25-Apr-13, 5:03 pm)
பார்வை : 150

மேலே