இப்படிக்கு கனவு காதலன்

கண்களால் தொடங்கி
கவிதையாய் வளர்ந்து
நாளும் உன்னை ரசித்து
தினம் கனவோடு வாழும் நான்

காலையில் தொடங்கி
மதியம் குசலம் விசாரித்து
மாலையில் உன்னால் கவிதை எழுதி
இரவானதும் நுழைக்கிறேன் என்னை கனவுலகில்

ஏமாற்றம் மட்டும் கண்டதில்லை
எனக்கான அந்த உலகில்
நான் நினைத்ததை நீ நடத்தினாய்
என் தேவையை நிறைவேற்றினாய்

ஏனடி நிஜத்தில் மட்டும் ஏங்க வைக்கிறாய்
நிஜமாய் நேசிக்கிறேன் இப்போதெல்லாம்
நீ கனவில் வருவதை மட்டும்
பார்த்துகொள் கனவுகாதலி
நிஜகாதலி ஆகாமல்

இப்படிக்கு கனவு காதலன்

எழுதியவர் : ருத்ரன் (25-Apr-13, 5:03 pm)
பார்வை : 102

மேலே