விடியட்டும் விட்டிடுங்கள்!

விடுதலை வேண்டினோம்
வெள்ளையரை தோற்கடித்தோம்.
வென்றதைக் காக்கவின்றும்
சொந்தங்களுடன் போராட்டம்!

மனிதருடன் போராடினோம்
மனம் மாறி விட்டுப்போனான்.
மடமையுடன் போராடுகிறோம்
மாளுவதும் அமைதிதான் !

விடியலைத் தேடுகிறோம்
விடவில்லை பேதவிருள்...
முடியாமல் முடிக்கறேனே
மூச்சடைக்குது ஊழல்புகை!

சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா. (30-Apr-13, 8:04 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 155

மேலே