இன்றும் நீ ! நாளை நீ ! என்றும் நீ !

காயங்கள் வேண்டும்
உள்ளத்தில்.!
தோல்வி வேண்டும்
வாழ்க்கையில்.!

காயம் வெல்ல வெறி
கொடுக்கும்.!
தோல்வி வாழ வெற்றி
கொடுக்கும்.!

ஒரு நாளில் எட்டிப்பிடிக்க
வெற்றி ஒன்றும்
எட்டும் கனியல்ல.!

விடாமுயற்சி இருந்தால்
வெற்றி ஒன்றும்
எட்டாக்கனியல்ல.!

செயல்படு!
செம்மைப்படு!
செறிவுபடு!
வெற்றி பெறு!

உலகம் உன் கையில்!
வெறிகொள்!
வெல்வதற்கு!

துன்பமில்லா வாழ்கை
இனிப்பில்லா லட்டு!
சோதனையில்லாமல்
சாதனையில்லை!

தோல்வியில்லா வெற்றி
கடையாணியற்ற சக்கரம்!
வேதனையில்லாமல்
வெற்றியில்லை!

இன்பம் துன்பம்
வாழ்கையின் இரு பக்கங்கள்.!
அதிலே,
அழுகை சிரிப்பு என்பன
மனிதனின் சத்தங்கள்.!

துன்பப்படா மனிதன் யார்.?
இன்பத்தில் மட்டுமே வாழும்
மனிதன் யார்.?

வாழ்க்கை தராசு
இருபக்கமும் சாயும்.!
இன்று கீழே.!
நாளை மேலே.!

வாழ்க்கைச் சக்கரம்
வேகமாய்ச் சுற்றும்.!
தாமதிக்காதே சற்றும்-மீறினால்
தோல்வியே முற்றும்.!

ஏக்கம் எதற்கு.?
தேக்கம் எதற்கு.?
முயற்சியைத் துவக்கு.!
வெற்றி உனக்கு.!

இன்றும் நீ ! நாளை நீ ! என்றும் நீ !

எழுதியவர் : செந்தமிழன் பாலா (9-May-13, 9:44 pm)
பார்வை : 159

மேலே