வானவில்லும் பாடம் சொல்லும்
மயிலுக்கு மட்டுமல்ல
மலைகளுக்கும் தோகை முளைக்கும்.....!
மழைக்கால வானவில்......!
அழிவதற்குள் அது அலங்கரிக்கும்
அந்த வினாடியில் ஆகாயத்தை.....- நாமும்
ஆயுலெல்லாம் அன்பு செய்வோம்
அழிந்த பின்னும் அவனியில் வாழ்வோம்...!