அக்கா - தங்கை Vs ஏழ்மை - பணம்


ழுகை வந்தால்

றுதலாய் விழி துடைப்பாள்......!

னிய தோழியென நட்பை

டு செய்வாள்.....!

ற்ற தாயெனவே

ழியம் செய்வாள்....!

ந்தையின் சாயலில்

ற்றமுறு வாய் மொழிவாள்.....!

யமுற வாழ்வுநெறி

ழுக்கமுற கற்றுணர்ந்து

ங்கு புகழ் நான் பெறவே.....
அவ்
வளவு அன்பையும்
அகம் மகிழ்ந்தே தந்திடுவாள்........!

அன்புள்ள அக்கா

உனக்கு எனது நன்றி......!!!!

விரல் பிடித்து பள்ளி சென்றது.....
விருட்டென்று உன் இடுப்பில் அமர்ந்தது....
என் சடை பின்னிய உன் விரல் நடனங்கள்...
எழில் மொட்டை மாடி நிலா கதைகள்........

அத்தனையும் ஞாபகம் வந்தாலும்........

நீயும் நானும் உள்ள அன்றைய
புகைப்படம் மட்டுமே இப்போது
புன்னகைத்துக் கொண்டிருக்கிறது.........

குடும்ப பிரச்சனைகளும்
கூறு போடும் பண ஏற்ற தாழ்வும்......
உன்னையும் என்னையும் வெகு தொலைவிற்கு
தள்ளி விட்டது...........

தயவு செய்து பணம் என்று
என் வீட்டுப் பக்கம் வந்து விடாதே.........

என் அந்தஸ்து வேறு
உன் அந்தஸ்து வேறு........!!!

முடிந்தால் அடுத்த ஜென்மத்தில்
பணமே இல்லாத உலகில் பிறப்போம்.....!!

என்னை மன்னித்து விடு......!!!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (18-May-13, 1:34 am)
பார்வை : 525

மேலே