அவனல்லாத ஒன்றை.
கனவுகளை தொலைத்தவன்
தூக்கத்தில் தேடுகிறான்
தூக்கத்தில் தேடி
கனவுகளில் தொலைகிறான்
கருப்பு வெள்ளைகளில்
பூத்து குலுங்கும்
பெயர் தெரியாத
பூக்களில் நடுவே
பெண் போல ஒரு உருவம்
ஓடிக்கொண்டேயிருக்க
விரட்டியபடியே
தொலைந்து போகிறான்
வண்ணங்களில் பெய்யும் மழையில்
பட்டம் பூச்சிகளின்
சிறகுகளில் நடந்த படியே
கிடைத்து விடுகிறான்
விடியலில்
நினைவிலிருக்கும் ஒன்று
கனவா....
கனவை தேடியதா
என புரியாத நொடியில்
மெல்ல தூங்கி போகிறான்...
இப்போது கனவுகள் தேட
ஆரம்பிகிறது
அவனல்லாத ஒன்றை....