மனதை அறியும் கருவி இருந்தால்.....

குழந்தையாய்ப் பிறந்தோம்
குணம்நாடி வளர்ந்தோம்
உள்ளொன்றும் வெளியொன்றும்
உதட்டிலொன்றும் மனத்திலொன்றும்
உலகத்து மேடைiயிலே
உத்தம நடிப்பு
முகத்திலே புன்சிரிப்பு
மனத்திலே புளுக்கம்
நேரிலே புகழ்ச்சி
மறைவிலே இகழ்ச்சி
போதும் போதும்
பொய்யான உலகை – நாம்
மெய்யாக நினைத்து
வெள்ளையாய்ப் பேசி
வீண்வம்பு விலைக்கு வாங்குவது
போதும் போதும்.......
குறைநிறை மனம் எங்குதான்உண்டு
தேடித்தேடிப் புலம்பும் மனதுடன்
விடைகாணவொண்ணா வினாவுக்கு
விளக்கம் காண வேண்டிக் கேட்கிறேன்

விஞ்ஞானிகளே!
விக்கினங்கள் தீர்க்குமோர் கருவியாம்
வியத்தகு கருவியாம் மனதை அறியும் கருவியை
விரைந்துதான் தரமாட்டீரோ
விடைதரமாட்டீரோ

எழுதியவர் : kowsy2010 (18-May-13, 11:36 am)
சேர்த்தது : KOWSY2010
பார்வை : 105

மேலே