எல்லாம் அழகுதான்
புற்கள்
அழகுதான்
பனித்துளிகளை
ஏந்தி கொண்டிருக்கும் போது !
பூக்கள்
அழகுதான்
வண்ணத்துப்பூச்சியை
ஏந்தி கொண்டிருக்கும் போது !
வானம்
அழகுதான்
பௌர்ணமி நிலவை
ஏந்தி கொண்டிருக்கும் போது !
தார்சாலை கூட
அழகுதான்
உன் நிழலை
ஏந்தி கொண்டிருக்கும் போது !!!