மங்கலம் என்பது மனைமாட்சி

நேற்று தான் உன்னை பார்த்தது போலிருந்தது.
அதற்குள் 34 வருடங்களா?
நமது கல்யாண வயதை தான் சொல்கிறேன்.
இத்தனை வருடங்கள் எப்படி உன்னால்,
இத்தனை பொறுமையுடன் இந்த கிறுக்கனோடு?
அழுகைகளும் சிரிப்புகளுமாக
வாழ்க்கை சக்கரம் ஓட்டமும் நடையுமாகஇன்னும்
தொலைந்து போன உறவுகளை
துடைத்து போட்டதும் கனவுகளாகவே.
இப்போதும் நமது பயணம் பிள்ளைகளின் கனவுகளோடு.