தமிழா ஒன்றுசேர் !

தமிழா ஒன்றுபடு
தமிழராய் நின்றே கருவி எடு
நித்தம் நித்தம்
நிற்கதியாய்
அலைந்து திரிந்த
அவலம் போதும்
ஆண்ட பூமியில்
மாண்டது போதும்
அடிமை விலங்கில்
உழன்றது போதும்
இழப்பு தந்த நெருப்பிலே
இயங்கிடு விடுதலை நினைப்பிலே

தமிழா !!
களம் காண
கரைபுரண்டு ஓடிவா
அக்காளும் தங்கையும்
அம்மாவும் தந்தையும்
தமிழரான யாவரையுமே
தரணியில் வாழா
தடம் அழித்த
சிங்களப் பகைதனின்
இனம் புதைக்க ஓடி வா !

தமிழா !!
சிறு கூறுகளாய் பிளந்து நின்று
சிதைந்த விடுதலை வெல்ல முடியாதே
சிங்களம் பதபதைக்கும்
சீறும் புலிப்படையாய்
கூடி நிற்க
கேடு விளையாதே!

தமிழா!!
உலகில் நீயில்லா நாடில்லை
உனக்கு மட்டும் நீதியென்ற ஒன்றில்லையோ
உன்னின மக்கள் குரல் ஓய்ந்து சாக
உலகில் ஓங்கிய குரல் ஏதும் உண்டோ

தமிழா!!
உனைத்தவிர உன்னினம் காக்கும்
உரிமை எவர்க்கு உரித்தோ
உன்னுள் இனியும் வேற்றுமை ஓங்கினால்
உன்னினம் வேருடன் வீழ்வது பொய்யோ
உலகத் தமிழினமே ஒன்றிணைவோம்
உலகை வென்றிடும் ஆற்றல் கொண்டிடுவோம்
உன்னத விடுதலை பெற்றிடுவோம்
உயர்ந்த தமிழுக்கு நம் பணி செய்திடுவோம்
தமிழா தமிழராய் ஒன்றுசேர் !
தமிழே தலைமையாய் விடுதலை சென்று சேர்..

எழுதியவர் : தமிழ்முகிலன் (5-Jun-13, 9:53 am)
பார்வை : 206

மேலே