மீண்டும்...மீண்டும்...!!

கருத்த காகம்
ஓன்று பறந்தே வந்தது

பெருத்த மாமர கிளையில்
வந்தே அமர்ந்தது

அங்கே...........

பளபளப்பாய்,சதைபிடிப்பாய்
ஓரு மாங்கனி

எச்சில் சுவையுற
மிச்சமின்றி முடித்தது
மாங்கனியை

மீந்தது கொட்டை மட்டுமே
முடிந்தது வேலை.....

பறந்தது காகம்
வீழ்ந்தது விதை......

மீண்டும் மாமரம்
மீண்டும் மாங்கனி
மீண்டும் காகம்
மீண்டும் விதை........!!

எழுதியவர் : வ.மெய்யப்பன் (6-Jun-13, 8:16 am)
சேர்த்தது : meyyappan
பார்வை : 81

மேலே