கொலைகாரி
ஓடிப் போ என்னை விட்டு
என்றென்றும் எனக்கு
தொல்லைதான் உன்னால் .
என்று உன் கண்களை
பார்த்து தொலைத்தேனோ
அன்றே அனுப்பி விட்டேன்
எமனுக்கு அழைப்பு.
சே! கண்களா அவை
உன்னைப் போலவே
இரட்டை வேடம் போடும் கபடதாரி
ஒன்று அனலாய் எரிக்கிறது
அல்லது
அருவியாய் கொட்டுகிறது
உன் பாச பேச்சுக்கள் புளித்து விட்டன
உண்மையைச் சொல்
என்னுடைய பத்தினியாகவா?
அல்லது உன்னுடைய பொழுதுபோக்கவா?
எதற்காக பழகினாய் என்னுடன் ?
நீயோ
விழிகளில் நீரை மட்டும் கொட்டுகிறாய்
துடிக்கும் என் இதயத்தை பார்
ரத்ததையல்லவா
பீச்சியடிக்கிறது
உன் மௌனம் ஒரு காலத்தில்
புத்தனின் சிரிப்பைப் போல அழகாய் இருந்தது
இன்றோ
புத்தனை வணங்கும் நாட்டு அதிபரைப் போல
அரக்கத்தனமாய் காட்சியளிக்கிறது
உன்னை கட்டி பிடிக்க சொல்லவில்லை
என்னைக் கட்டிக்கொள்ள சம்மதமா
என்று தான் கேட்கிறேன்
நீயோ மௌன பிளேடுகளால்
அங்குல அங்குலமாக கழுத்தை அறுக்கிறாய்
இனி உன் முத்தங்கள் தேவையில்லை
முழுமையாக நீ தான் எனக்கு தேவை
என் மனைவியாக
உன் வெற்று உறவுகளுக்காய்
என்னை வெட்டி விடாதே
வாழச் சம்மதம் சொல்
அல்லது
விட்டுவிலகு நான்
மரணப் பெண்ணை மார்புறத் தழுவ