வாடுதென் உயிர்ப்பூ
சிந்தையில் சிரிப்பவளே...
செந்நீரை எரிப்பவளே...
என்னுயிரை உருக்குலைத்து
உன்னிழலை தொடரவைத்த
அந்தியில் உனைக்கான
அஷ்டம சூரியனை
அடம்பிடித்து நிறுத்திவைத்தேன்
வட்ட நிலா காணாத அந்திமல்லி -தன்
மொட்டவிழ்ந்து நறுமணம் வீசாது
வட்டமிட்டு வலிந்தும் உனைக்காணாது
வாட்டமுற்ற என்மனம் உறங்காது
தழுவிய தென்றலைத் தேடுது நறுமணப்பூ
உன்
தரிசனம் காணமல் வாடுதென் உயிர்ப்பூ