ஏனிப்படி?
பசியில் துடிக்கிறேன்
விவசாயம் போதிக்கிறார்கள்.
தாகத்தால் துவள்கிறேன்
கிணறு தோண்டச்
சொல்கிறார்கள்.
வெயிலில் வேகின்றேன்
மரம் வளர்
என்கிறார்கள்.
குளிரால் நடுங்குகிறேன்
கம்பளி நெய்தல் பற்றி
பாடம் நடத்துகிறார்கள்.
ஏனிப்படி?
என் வேதனைகள் பொய்யோ?
அன்றி
உடனே உதவும் மனம்
இங்கெவர்க்குமில்லையோ?