ஊமை பெண்ணாக நான் ....உன் நினைவில் ...

என்னவனே

அழகான ஆழமான
காதல் பிரிவின் வலிகள்
என்னில் உன்னால் ....

மழையின் காதல்
இல்லாமல் உயிரை
மாய்த்துக்கொள்ளும் பசுமையான
தாவரங்களின் இறப்பை
போல ....

உன் அன்பு
இல்லாமல் என் உயிரான
காதல் உயிரற்று இன்று ....

பல வண்ணக்களை கொண்ட
வண்ணத்துப்பூச்சியின் வாழ்வோ
ஓரிரு நாட்கள் மட்டுமே ...

அது போல நீ என் மீது
கொண்ட காதலுமென
அறிந்தேன் உன் வார்த்தைகளால் ...

சிறகுகளால் உயிர் வாழும்
அழகிய பறவைகளின்
இறகாய் ...

என் காதல் அழகிய வானம்பாடி
பறவையாக உன்னுடன்
காதல் கொண்டு வானில்
சிறகடித்து பறக்க ...

வேடனின் அம்புக்கு சொந்தமான
பறவையாக சாதி எனும்
அம்புக்கு பலியானது என் காதல் ...

குழந்தையின் அழுகை
இதற்கென அறியும் அன்னைபோல ...

என் காதல் வலிகள்
உன்னால் என அறிந்தும்
உன் அன்பை ஓர் அன்னையிடம்
பாசத்திற்கு ஏங்கும் குழந்தையாய்
கேட்கிறேன் ....

என் காதலெனும் அன்பை
உணராத அன்னையாய் நீ இன்று ...

என்றும் உன் அன்புக்கு
அடம் பிடித்து அழும் குழந்தையாக
என் காதல் ..

உன் பிரிவை எண்ணி
என் விழிகள் உன் நினைவை
கண்ணீராக கரைக்க ...

என் கண்ணீருக்கு
அர்த்தம் கேட்கும் -என்
அன்னையின் கேள்விக்கு
பதில் தரா ஊமை பெண்ணாக
நான் உன் நினைவில்.....

எழுதியவர் : சங்கீதா.k (26-Jun-13, 5:15 pm)
பார்வை : 215

மேலே