காதல் தோல்வி...

கரிக்கட்டை யானதிங்கே
தேகம் =மனம்
கலங்காதே காதலொரு
சோகம்................................

கைக்குட்டை போலவொரு
வானம் =தினம்
காத்திருந்தும் பொழியவில்லை
மேகம்............................................

கூட்டுபுழுவாக =ஒரு
காட்டுக்குள் கிடந்தவனை
வண்ணத்து பூச்சியாக்கி
வானத்தில் விட்டவளே............

ரோட்டுத் தெருவோரம்=ஒரு
காகிதமாய் இருந்தயென்னை
பாட்டு கவிதையாக்கி
பக்கத்தில் அமர்ந்தவளே............

மீட்டும் வீணையினை=ஒரு
பாட்டும் பாடவைத்தாய்
பாடி முடிப்பதற்குள் =ஏன்
நாணை அறுத்துவிட்டாய்?
=============================

எழுதியவர் : பாசகுமார் (26-Jun-13, 4:27 pm)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 154

மேலே