சடையன் பெயரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சடையன் பெயரன்
இடம்:  இராசேந்திரப்பட்டிணம்
பிறந்த தேதி :  07-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jun-2013
பார்த்தவர்கள்:  610
புள்ளி:  125

என்னைப் பற்றி...

சாதி ஒழிப்பு களத்தில் உயிர்நீத்த களப்போராளிகளை நினைவெத்தவாறு பேசுகின்றேன்...........

தமிழனென்ற பேரினம் இவ்வாறு வறலாறு அழிந்து
வகையற்று வாழ்வதற்கு காரணம் சாதியென்பதுதான் என்று முழுதும் தெரிந்தும்கூட அதனை ஒழிக்க முன்வராமல், வெறுமெனே தமிழ் தமிழ் தமிழென்று கூப்பாடுபோடும் கூமுட்டைகளுக்கு மத்தியில்,அடிபட்ட இனத்தில் பிறந்து சாப்பாட்டிற்குகூட வழியில்லாத மாடுமேய்க்கும் தகப்பனுக்கு பிறந்து, சாதி ஒழிப்பையும் தாண்டி பல்வேறு எதிர்ப்புகளையும் இருட்டடிப்புகளையும் எதிகொண்டு தமிழ்தேசிய போராட்ட களத்தில் தன் வாழ்வு தொலைத்து நின்றுகொண்டிருக்கின்ற எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் போர்படையில் ஒருவனாகவே.............வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்...............


அம்பேத்கர் துதிப்போம்...........



ஆயிரமாயிர ஆண்டுகளாய்
அடிமை யாக்கினாரை=அண்ணல்
அதிரச் செய்தார்...........................

விழுகிறவீழ்கிற ஆடுகளாய்
மடமை செய்தோரை=அண்ணல்
மிரளச் செய்தார்..................................

அதிரடி படைதிரட்டி
அறிவாயுத நிதிபுரட்டி=நம்
அடிமைத்தன மறுத்தார்....................

சிதையுண்ட கல்கூட்டி
சிற்பமாய் நிலைநாட்ட=அவர்
சிந்தனை யுளியெடுத்தார்...............

இருட்டில் கிடந்தநம்மை
இணையற்ற மனிதராக்க=அவர்
இந்திய சட்டம்தந்தார்...............

இனிநாங்கள் ஆடல்ல
இணையில்லா சிங்கமென்று=அவர்
இராணுவ மொழிதந்தார்...................

கொத்தடிமை பிறப்பென்று
கொக்கரித்த கூட்டங்களை=அவர்
கோயிலுக்குள் நுழைந்தடித்தார்...............

இந்துமத கோரங்களை
இயலாதோர் பொய்களென்று=அவர்
இடுகாட்டில் சுட்டெரித்தார்.....................

இனியெப்போதும் பிறப்பதில்லை
இவர்போல ஓரறிஞ்சன்=நாம்
இவர்வழி பயணிப்போம்.................

உலகுள்ளவரை மறைவதில்லை
உத்தமர்தம் அறிவாற்றல்=நாம்
உள்ளமேற்று துதிப்போம்................



இவண்
சடையன் பெயரன்
சிங்கப்பூரிலிருந்து........

என் படைப்புகள்
சடையன் பெயரன் செய்திகள்
சடையன் பெயரன் - சடையன் பெயரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2014 8:05 am

நம்
நேரத்தை உணர்த்த,
நாள்தோறும்
நாறாய் கிழிகின்றது...........

&&&&

மேலும்

சடையன் பெயரன் - சடையன் பெயரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2014 8:00 am

சாதி,
மனிதங்களை
வேறறுக்கின்றது...............

மாற்றங்களை
விழுங்கி,
ஏப்பமிடுகின்றது..................

நடுநிலை
நண்பர்களையும்,
மதில்மேல்
பூனையாக்குகின்றது..............

மனித
மனங்களில்
இருந்துகொண்டு,
உதடுகளில்
இல்லாதாகின்றது............

@@@@@

மேலும்

சடையன் பெயரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2014 8:05 am

நம்
நேரத்தை உணர்த்த,
நாள்தோறும்
நாறாய் கிழிகின்றது...........

&&&&

மேலும்

சடையன் பெயரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2014 8:00 am

சாதி,
மனிதங்களை
வேறறுக்கின்றது...............

மாற்றங்களை
விழுங்கி,
ஏப்பமிடுகின்றது..................

நடுநிலை
நண்பர்களையும்,
மதில்மேல்
பூனையாக்குகின்றது..............

மனித
மனங்களில்
இருந்துகொண்டு,
உதடுகளில்
இல்லாதாகின்றது............

@@@@@

மேலும்

சடையன் பெயரன் - சடையன் பெயரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2014 7:37 am

பணம்
பைத்தியக்காரர்களின்
பசியாற்றும்
பண்டம்..................

இது
கெடுவதில்லை,
கெடுத்துவிடுகின்றது.............

@@@

மேலும்

நன்று! 04-May-2014 12:06 pm
சடையன் பெயரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2014 7:37 am

பணம்
பைத்தியக்காரர்களின்
பசியாற்றும்
பண்டம்..................

இது
கெடுவதில்லை,
கெடுத்துவிடுகின்றது.............

@@@

மேலும்

நன்று! 04-May-2014 12:06 pm
சடையன் பெயரன் - சடையன் பெயரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2013 5:12 pm

செடிகொடிகள் காய்த்துவிட்டால்

காத்திருப்பதில்லை =ஏழை

பெண்மையிங்கே பூத்துவிட்டால்

மாலையாவதில்லை.............



விலங்கினங்கள் பூப்பெய்தி

புழுங்கிசாவதில்லை =இந்த

மனிதனைப்போல் காசுபார்த்து

காதல்செய்வதில்லை...............



கற்புநெறி கண்டுயாரும்

துணையை தேடவில்லை =மனம்

முதிர்கன்னி முகம்பார்த்தால்

மூச்சுவிடுவதில்லை.................



மொழியறியா பறவைகூட

உணர்ச்சி விடுவதில்லை = இந்த

விதியறியா சமூகமோ

உணர்ந்து கொள்வதில்லை............



வயதான கன்னியர்கள்

வாய் திறப்பதில்லை = மனித

வாய்கொண்ட நாவுதனில்

மாட்டிக் கொள்வதில்லை....

மேலும்

சடையன் பெயரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2014 6:53 am

குண்டு வெடிப்புகள்

குமுறி வெடிக்கின்றன,

கூருகெட்ட மனிதத்தின்

குரூரத்தை நினைத்து..............



மனித உடல்கள்

மரணஓலத்தில்

சிதறுகின்றபோது,

"சீ" யென துப்புகின்றன

சிற்றறிவு ஜீவராசிகள்..........



மனம்தான்

பதறுகின்றது,

மதமென்ன மதமென்று...............



இனமெல்லாம்

அழுகின்றது,

இதயமேது இங்கென்று..............



தீவிரத்தின்

பசிக்கு,

தினக்கூலிகளா

உணவாகவேண்டும்........



அப்பாவி

மக்களுக்கா,

அணுகுண்டுகளின்

அறிவிப்புகள் புரியும்............



அடப்பாவிகளே,

அப்படியா

அழிக்கச்சொன்னான்

அறிவுகெட்ட ஆண்டவன்...........

மேலும்

நன்று ! 02-May-2014 4:40 pm
சடையன் பெயரன் - சடையன் பெயரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2014 9:12 am

கம்பியூட்டரு
காலத்திலும் =எங்க
காலுல செருப்பில்ல……

கருப்புசாமி
கோயிலுக்கும் =எங்க
கையால சூடமில்ல………….

காலமாறி
போனாலும் =நாங்க
கைகட்டி நிக்கும்நில…………..

பொழுதெல்லாம்
உழச்சாலும் =எங்க
பொழப்புக்கு போதவில்ல……….

தலையெல்லாம்
நரச்சாலும் =எங்க
தலமுறைக்கு ஓய்வில்ல………

அறிவியலே
நெனச்சாலும் =எங்க
அடிமநில மாறவில்ல……………

ஆயிரமே
படிச்சாலும் =எங்க
அப்பழுக்கு போகவில்ல…………..
@
தண்ணிவரா
சேரிக்குள்ள =ஊர்
நெருப்புவந்து எரிப்பதென்ன…………….

ஆண்டவரா
தெருவுக்குள்ள =எங்க
அடிமசாதி கெடப்பதென்ன…………

பன்னியினும்
கேவலமாய் =எங்க
பறம்பறையே படுவதென்ன……………..

அரசாங்க
இலவசங்க =எங்

மேலும்

நன்றி அய்யா ...... 30-Apr-2014 2:19 pm
பாசகுமார் உங்களின் உயர்ந்த எண்ணத்தை மிக அழகாக தெளிவாக அளித்தமைக்கு பாராட்டுக்கள் . உண்மையே அனைத்தும் 30-Apr-2014 10:48 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சிவநாதன்

சிவநாதன்

யாழ்ப்பாணம் இலங்கை
sarabass

sarabass

trichy

இவரை பின்தொடர்பவர்கள் (10)

sarabass

sarabass

trichy
சிவநாதன்

சிவநாதன்

யாழ்ப்பாணம் இலங்கை
மேலே