பல வித ஆசைகளை

தோழமை தாரகையின் ஆசைக்கு இணங்கி
படைக்கப்பட்ட கவிதை....

கருப்பென்ற எண்ணம் எதற்கு
தாயின் கருவறையில்
வெளிச்சம் இல்லை
கருப்புதான்....

ரத்தத்தை சேர்த்து
உணவாக்கும்
தாய்ப்பாலின்
முலை நிறம் கருப்பு....

உலகம் முழுவதும்
தெரிந்தது தெரியாதது
அறிந்தது அறியாதது
என அனைத்தையும்
பார்க்கும் கண்ணின் மணிகள்
கருப்புதான்....

உயிர் வாழ மூச்செடுக்கும்
மூக்கை தள்ளி நின்று
உற்று நோக்கினால்
கருப்புதான்.....

பல விதமான
ஆசைகளை கூட்டில்
அடைத்து வைத்து
தூக்கத்தில்
கண்கள் காணும் கனவு
இருட்டில்தான் என்பதால்
அதுவும் கருப்புதான்........

நன்றி தாரகை
கருப்பிற்கு எத்தனை மதிப்பு
என்று என்னை உணரச் செய்தமைக்கு

எழுதியவர் : சாந்தி (26-Jun-13, 11:22 pm)
பார்வை : 110

மேலே