அறம்....அகம்......சுகம்....
மண்ணின் அறம் எது ?
மரணமெனில்,
கள்ளிப்பால் ஊட்டல் எதற்கு....??
விண்ணின் அறம் எது ?
மழைத்துளி எனில்,
வரட்சி வரலாறு ஏன் ...?
பண்ணின் அறம் எது ?
கவிதைகள் எனில்,
ராகப்பிசிருகள் எதற்கு ...?
கண்ணின் அறம் எது ?
காட்சிகள் எனில் ,
காம நிகழ்வுகள் ஏன்..?