அறம்....அகம்......சுகம்....

மண்ணின் அறம் எது ?
மரணமெனில்,
கள்ளிப்பால் ஊட்டல் எதற்கு....??

விண்ணின் அறம் எது ?
மழைத்துளி எனில்,
வரட்சி வரலாறு ஏன் ...?

பண்ணின் அறம் எது ?
கவிதைகள் எனில்,
ராகப்பிசிருகள் எதற்கு ...?

கண்ணின் அறம் எது ?
காட்சிகள் எனில் ,
காம நிகழ்வுகள் ஏன்..?

எழுதியவர் : வீரன்தாமரை (28-Jun-13, 2:07 pm)
சேர்த்தது : veeranthamarai
பார்வை : 87

மேலே