ஆதவனுக்கு ஒரு டிக்காசன் காபி

மழை விரலால்
முகில் வரைந்த கோலம்
சாலை குழியில்
குட்டி நீர்த் தேக்கம்......!
இல்லை இல்லை அது
காலை பகலவனுக்கு
பூமி போட்டு வைத்த காபி...!!
ஆறி இருந்தாலும் - அந்த
ஆதவன் இன்னும்
ஐந்தாறு நிமிடங்களில்
அமைதியாக குடிக்கத் தொடங்குவான்....!!!